மொசில்லா அறிக்கை வெளியீடு

ஒரு வளமான இணையத்திற்கு வித்திடுங்கள்

திறந்த, உலகளாவிய இணையம் என்பது நாம் பார்த்திராத மிகவும் வலிமையான தொடர்பு மற்றும் கூட்டுப்பங்காற்று வளமாகும். இது மனித முன்னேற்றத்திற்கான நமது ஆழமான நம்பிக்கைகளில் சிலவற்றை உள்ளடக்கியுள்ளது. அது கற்றலுக்கான புதிய வாய்ப்புகளுக்கு உதவுகிறது, பகிர்தல் மனித உணர்வைக் கட்டமைக்கிறது, மக்கள் எல்லா இடங்களிலும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் நாம் இந்த வாக்குறுதி நிறைவேறுவதை பல வழிகளில் கண்டோம். பிரிவுகளைப் பெரிதாக்கவும், வன்முறையைத் தூண்டவும், வெறுப்பை ஊக்குவிக்கவும் மற்றும் உண்மைகளை வேண்டுமென்றே திறக்கவும் பயன்படுத்தப்படக்கூடிய இணையத்தின் ஆற்றலையும் நாம் கண்டுள்ளோம். இதன்மூலம் இணையத்தின் மனித அனுபவத்திற்கான நம்பிக்கையை இன்னும் தெளிவாக முன்வைக்க வேண்டும் ன்பதை நாங்கள் கற்றுக் கொண்டோம். நாங்கள் அதனை இப்போது செய்கிறோம்.

  1. பூமியில் உள்ள எல்லா மக்களையும் உள்ளடக்கிய ஒரு இணையத்திற்காக நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் — அந்த இணையத்தில் ஒருவரின் மக்களிடப் பண்புகளானது அவரின் இணைய அணுகல், வாய்ப்புகள், அல்லது தரத்தினைத் தீர்மானிக்காது.
  2. குடிமை வெளிப்பாடு, மனித மாண்பு, மற்றும் தனிப்பட்ட வெளிப்பாடுகளை ஊக்குவிக்கும் ஒரு இணையத்திற்காக நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
  3. ஆய்வுச் சிந்தனை, அறிவார்ந்த வாதம், பகிரப்பட்ட அறிவு, மற்றும் சரிபார்க்கக்கூடிய உண்மைகளை உயர்த்திப் பிடிக்கும் ஒரு இணையத்திற்காக நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
  4. ஒரு பொதுவான நன்மைக்காக இணைந்து பணியாற்றும் பல்வேறு சமூகங்களிடையே கூட்டுமுயற்சியை ஊக்குவிக்கும் ஒரு இணையத்திற்காக நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

எங்களின் 10 கொள்கைகள்

  1. தத்துவம் 1

    இணையம் என்பது நவீன வாழ்க்கையின் நெருங்கிய அங்கமாகும் - இது கல்வி, தகவல் தொடர்பு, ஒத்துழைப்பு, வியாபாரம், பொழுதுபோக்கு மற்றும் சமுதாயத்தில் முக்கிய கூறாக விளங்குகிறது.

  2. தத்துவம் 2

    இணையம் உலகளாவிய பொது வளம், அது வெளிப்படைத்தன்மையுடனும் அணுகக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

  3. தத்துவம் 3

    இணையம் மனிதர்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்த வேண்டும்.

  4. தத்துவம் 4

    இணையத்தில் தனிமனிதர்களின் பாதுகாப்பும் தனியுரிமையும் ஒரு விருப்பத்தேர்வாக நடத்த முடியாது மாறாக அதை ஒரு அடிப்படை உரிமையாகக் கருத வேண்டும்.

  5. தத்துவம் 5

    தனிநபர்கள் இணையத்தை வடிவமைப்போதோடு சொந்த அனுபவங்களையும் வடிவமைப்பதற்கான திறனைக் கொண்டிருக்க வேண்டும்.

  6. தத்துவம் 6

    இணையத்தின் பாதிப்பு என்பது ஒரு பொது வளமாக அதன் செயல்திறன், இயங்குதன்மை (நெறிமுறைகள், தரவு வடிவங்கள், உள்ளடக்கம்), புத்தாக்கம் மற்றும் உலகளாவிய பன்முக பங்கேற்பு ஆகியவற்றைச் சார்ந்துள்ளது.

  7. தத்துவம் 7

    கட்டற்ற திறந்த மூல மென்பொருள் இணையத்தை ஒரு பொது வளமாக உருவாவதை ஊக்குவிக்கிறது.

  8. தத்துவம் 8

    வெளிப்படையான சமூகம் சார்ந்த செயல்முறைகள் பங்கேற்பு, பொறுப்புணர்வு மற்றும் நம்பிக்கை போன்றவற்றை ஊக்குவிக்கின்றது.

  9. தத்துவம் 9

    இணையத்தின் வளர்ச்சியில் வர்த்தகத்தின் ஈடுபாடு பல நன்மைகளைத் தருகிறது; வணிக இலாபத்திற்கும் பொது நலனுக்கும் இடையேயான ஒரு சமநிலை முக்கியமானது.

  10. தத்துவம் 10

    இணையத்தின் பொது நலன்களை அதிகப்படுத்துவது காலத்திற்கும், கவனத்திற்கும் பொறுப்பிற்கு தகுதியுள்ள ஒரு முக்கிய குறிக்கோள் ஆகும்.